அழகை காட்டினால்தான் படம் ஓடும்


நான் உடலை மறைத்து இழுத்து போர்த்திக் கொண்டு நடித்தால் அந்த படம் ஓடாது, என்று கவர்ச்சி நடிகை மல்லிகா ஷெராவத் கூறியுள்ளார். பாலிவுட்டின் கவர்ச்சி புயல் மல்லிகா ஷெராவத் மும்பையில் ஒரு பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில், நான் படிப்பை முடித்ததும் சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டேன். அதற்கு பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் நான் அவர்களை விட்டு பிரிந்து வந்து தனியாக வசித்தேன்.
 
அப்போது முன்னணி டைரக்டர்கள், தயாரிப்பாளர்களிடம் சென்று “சான்ஸ்” கேட்டேன். அவர்கள் என் முகத்தைப் பார்த்து நடிகைக்கான தகுதி இல்லை என்று நிராகரித்தனர். ஆனாலும் மனம் தளரவில்லை. என்னிடம் இருந்த நகைகள் அனைத்தையும் விற்று செலவு செய்தேன். அதுவும் காலியான பிறகுதான் போட்டோ கிராபர் பரூக் பாட்டியா எனக்கு அறிமுகமானார். அவர் எனது முகஅழகுக்கு முக்கியம் தராமல் உடல் தோற்றத்தை மிடுக்காக படம் பிடித்தார்.

அந்த போட்டோக்களுடன் பட நிறுவனங்களுக்கு சென்று வாய்ப்பு கேட்டேன். அப்போது “குவாலிஸ்” என்ற படத் தயாரிப்பாளர் எனது உடல் அழகைப் பார்த்து வாய்ப்பு கொடுத்தார். படம் ஓரளவு வெற்றி பெற்றது. இதற்கு அடுத்து “மர்டர்” என்ற படத்தில் நடித்தேன். இப்படம் அபார வெற்றி பெற்றதுடன் லட்சக்கணக்கான ரசிகர்களை எனக்கு பெற்றுத் தந்தது.
 
இப்போதெல்லாம் நடிகைகள் உடலை மறைத்து நடித்தால் படம் ஓடாது. இருக்கிற அழகை வெளிக்காட்டினால்தான் ஓடும். ரசிகர்களும் முக அழகை விட உடல் அழகுக்குதான் முக்கியத்துவம் தருகிறார்கள். நான் எந்த நடிகையையும் போட்டியாக கருதவில்லை. இதனால் பொறாமை என்ற பேச்சுக்கே என்னிடம் இடம் கிடையாது, என்று கூறியுள்ளார்.

பாலாவுக்கு பாலசந்தர் புகழாரம்

தயாரிப்பாளர் சிவா தான் தயாரிக்கும் புதிய படத்தின் தொடக்க விழாவில் இயக்குனர் பாலாவை கவுரவப் படுத்தினார். விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட டைரக்டர் பாலசந்தர், பாலாவுக்கு நினைவுப்பரிசு வழங்கி, வாழ்த்தி பேசினார்.அவர் மேலும் ஒரு படம் எடுக்குறதுக்கு மூணு வருஷம் என்பதெல்லாம் ரொம்ப ஓவர். அதை கொஞ்சம் குறைத்துக்கொள்ளுங்கள்... என்று டைரக்டர் பாலாவிடம், பாலசந்தர் கேட்டுக் கொண்டார். நான் கடவுள் படத்துக்காக சிறந்த இயக்குனருக்கான தேசிய விருது பெற்றிருக்கும் டைரக்டர் பாலாவை கோலிவுட் பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

அவர் பேசுகையில், "நடுத்தர சினிமாவை மேலே எடுத்துச்சென்றவர் பாலா, இவரின் படங்களைப் பார்த்து நான் வியந்திருக்கிறேன். என்ன இவர் படங்கள் வெளியாவதற்குத்தான் மூன்று வருஷமாகிறது. இதை நீங்க கொஞ்சம் கட்டுப்படுத்துங்க சார். நான் உங்களின் ரசிகர்களின் தலைவனாக கேட்டுக் கொள்கிறேன். உங்கள் படங்களை பார்க்க நான் மிகவும் ஆவலாக இருக்கிறேன். என்னைப் போலதான் மக்களும். எனவே இரண்டு, மூன்று வருஷம் ரொம்ப ஓவர். ஒரு வருடத்திற்குள் படத்தை முடித்து விடுங்கள். இதை நீங்கள் எனது அட்வைஸாக எடுத்துக்கொள்ள வேண்டும். நான் என்ன செய்ய.... வயதாகி விட்டது அதனால் இப்படி அட்வைஸ் செய்யத்தான் வேண்டும். உங்கள் படங்களைப் பார்த்து நான் சிலவற்றை கற்றுக் கொள்கிறேன். எதையெல்லாம் நான் செய்யவில்லை என்று உங்கள் படத்தை பார்த்துதான் நான் அறிந்துக்கொள்கிறேன்." என்றார். 

Rettaisuzhi Tamil Movie Trailer