ப்ரீத்திக்கும் லீக்கும் காதலாம்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பிரட் லீக்கும் பாலிவுட் நடிகை ப்ரீத்தி ஜிந்தாவுக்கும் காதல் என்று சமீப காலமாக கிசுகிசுக்கப்படுகிறது.

பஞ்சாப் கிங்ஸ் லெவன் அணியின் உரிமையாளர்களில் ஒருவர் ப்ரீத்தி ஜிந்தா. இந்த அணியின் நட்சத்திர பவுலர் பிரட் லீ. இவர் தன் மனைவியைப் பிரிந்து வாழ்கிறார்.

இந்த நிலையில், ஐபிஎல் போட்டிக்குப் பிறகு நடந்த இரவு நேர விருந்தில் ப்ரீத்தியும் பிரட் லீயும் பிரட்டும் ஜாமும் போல ஒட்டி உறவாடினார்களாம்.
இவர்களின் நெருக்கத்தைப் பார்த்து மனம் வெதும்பித்தான் யுவராஜ் சிங் அணியை விட்டே வெளியேறுவேன் என்று கூறியதாகவும் பரபரப்பாக பேசப்படுகிறது (யுவராஜ் சிங் இப்போது அதை மறுத்துள்ளார்).

இருவரும் டேட்டிங் போனதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இதனை பிரட் லீயின் மேனேஜர் மறுத்துள்ளார்.

இதுகுறித்து பஞ்சாப் அணியினர் இப்படிக் கூறுகின்றனர்:

"ப்ரீத்தி ஜிந்தாவுக்கு பஞ்சாப் அணி வீரர்கள் மீது தனி பிரியம். அதனால்தான் அவர் மிக நெருக்கமாகப் பழகி வந்தார். நட்புடன் அணைத்துக் கொண்டார்.

முன்பு யுவராஜ் சிங்கை அவர் கட்டிப் பிடித்ததை இப்படித்தான் மிகைப்படுத்தி விட்டார்கள். அணியின் நன்மைக்காகவே ப்ரீத்தி இந்த அளவு சுதந்திரமாக அனைவருடனும் பழகி வருகிறார். அதைப் போய் தவறாகப் பேசுவதா?" என்றனர்.
 

உணர்ச்சி மிகுதில் பிரியங்காவை கட்டிப்பிடித்த ரசிகர்

ஆர்வம் மிகுதியால் தன்னைக் கட்டிப்பிடித்த ரசிகர் ஒருவருக்கு பளார் விட்டார் நடிகை ப்ரியங்கா சோப்ரா.


பொதுவாகவே படங்களில் பிஸியாக இருக்கும் ப்ரியங்கா சோப்ரா பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதில்லை. தவிர்க்க முடியாமல் பங்கேற்கும் நிலை வந்தாலும் ஏகப்பட்ட செக்யூரிட்டிகளோடு தான் வருகிரார்.

சமீபத்தில் ஒரு விருந்துக்கு அவரை அழைத்திருந்தார் ப்ரியங்காவுக்கு வேண்டப்பட்டவர். கட்டாயம் பங்கேற்றே தீர வேண்டும் என்பதால், படப்பிடிப்பு தளத்திலிருந்து கேரவனில் உடை மாற்றிக் கொண்டு விருந்துக்கு சென்றார் ப்ரியங்கா.

விருந்து நடந்த வீட்டின் முன்னால் வந்து இறங்கியபோது அங்கு ஏராளமான இளைஞர்கள் கூடி நின்றனர். அதில் ஒருவர் பிரியங்கா சோப்ராவை பார்த்ததும் உணர்ச்சிவசப்பட்டு படாரென்று ப்ரியங்காவைக் கட்டிப் பிடித்தார். கூடி நின்ற மற்ற இளைஞர்களும் அவரை சூழ்ந்து, ப்ரியங்காவைத் தொட முயன்றனர்.

இத்ல் ஆத்திரமடைந்த பிரியங்கா சோப்ரா, அந்த ரசிகரின் பிடியில் இருந்து திமிறி விடுபட்டார். அப்போதும் அந்த இடத்தைவிட்டு நகராத ரசிகர் கன்னத்தில் ஓங்கி ஒரு பளார் விட்டார்.

உடனே ப்ரியங்காவுடன் வந்திருந்த பாதுகாவர்கள் அந்த ரசிகரை அடித்துத் துவைத்தனர். அவரை போலீ சில் ஒப்படைக்க முயன்றனர். ஆனால் பிரியங்கா வேண்டாம் விட்டு விடுங்கள் என்று கூறி விட்டார்.

இந்த சம்பவத்தால் மூட் அவுட் ஆன ப்ரியங்கா, விருந்துக்குச் செல்லாமல் வண்டியை வீட்டுக்கு விடச் சொன்னதில், விருந்துக்கு அழைத்த நண்பர் மனம் உடைந்தது தனிக்கதை!