ஜல்பு பிடிச்சா என்ன பண்ணுவிங்க அம்மணி..

புரசைவாக்கத்திலிருந்து சென்னை அடையாறு பார்க் ஷெரட்டன் பகுதிக்கு வீடு மாறி வந்துவிட்டார் த்ரிஷா.

இது த்ரிஷாவின் விருப்பத்துக்கேற்ப பார்த்துப் பார்த்து கட்டிய வீடாம். வீட்டுக்குள் நுழைந்துவிட்டால், வெளி உலகமே மறந்துவிடும் அளவுக்கு அனைத்து வசதிகளும் உண்டாம்.

தான் வெளிநாடுகளில் பார்த்து அனுபவித்த ரசித்த பல விஷயங்களை வீட்டுக்குள்ளேயே கொண்டுவந்துவிட்டாராம்.

இந்த வீட்டின் செக்யூரிட்டி சிஸ்டம் சக நடிக நடிகர்களை வாய் பிளக்க வைத்துள்ளது.

வீட்டைச் சுற்றிலும் ரகசியமாக கண்காணிப்பு கேமராவையும் பொருத்தி வைத்துள்ளாராம் த்ரிஷா. திருட்டு முயற்சி அல்லது தான் இல்லாத போது வரும் நபர்கள் பற்றி இதில் தெரிந்து கொள்ளலாம் என்பதால் இந்த வசதியாம்.

வாய்ஸ் லேசர் சிஸ்டம் மூலம் வீட்டுக்கு பூட்டு வசதி செய்துள்ளார். திரிஷாவும், தாய் உமாகிருஷ்ணனும் கதவருகில் நின்று குரல் கொடுத்தால் உடனே திறக்கும். வீட்டுக்குள் நுழைந்ததும் மீண்டும் சாத்திக்கொள்ளும்.

வெளியே யாரேனும் வந்து அழைத்தால் வீட்டுக்குள் இருந்து திரிஷாவோ அல்லது அவர் தாயோ குரல் கொடுத்தால்தான் கதவு திறக்குமாம். வெளிநாடுகளில் இந்த வசதி கொண்ட வீடுகளை சர்வ சாதாரணமாகப் பார்த்தாலும், சென்னைக்கு இது புதுசுதானே...

Ravanan Photo Gallery







வாயசைத்தால் அபராதமா? சமிரா

காரில் ஒலித்த பாட்டுக்கு ஏற்ப வாயசைத்தபடி கார் ஓட்டியதை, செல்போனில் பேசியதாக நினைத்து எனக்கு அபராதம் போட்டார்கள் போலீசார் என்றார் சமீரா ரெட்டி.

வாரணம் ஆயிரம், அசல் படங்களின் நாயகி சமீரா ரெட்டி. போகுமிடமெல்லாம் போலீசுடன் மோதும் ராசி இவருக்கு.


ஏற்கனவே மலேசியா போலீசாருடன் மோதியதில் லிப்டில் இருந்து வெளியில் தள்ளப்பட்டார் சமீரா. இப்போது மும்பை போலீசாருடனும் மோதியுள்ளார்.

போக்குவரத்து போலீசார் தன்னிடம் லஞ்சம் கேட்டதாக புகார் கூறியுள்ளார். இதுபற்றி நிருபர்களிடம் சமீரா கூறுகையில், "மும்பையில் இருந்து சாந்தா குரூஸ் விமான நிலையத்துக்கு காரில் சென்று கொண்டிருந்தேன். விமான நிலையம் அருகில் எனது காரை போக்குவரத்து போலீசார் வழிமறித்து நிறுத்தினர். நான் செல்போனில் பேசிக்கொண்டே கார் ஓட்டியதாக குற்றம் சுமத்தினர்.

ஆனால் உண்மையில் நான் செல்போனில் பேசவில்லை. செல்போனில் இருந்து வந்த பாட்டுக்கு ஏற்ப என் உதடுகளை அசைத்தேன். நான் பேசிக்கொண்டு வந்ததாக தப்பாக நினைத்து என்னைப் பிடித்து விட்டனர். அவர்களிடம் செல்போனில் பேசவில்லை என்று எவ்வளவு கெஞ்சியும் கேட்கவில்லை. வேறு வழியில்லாமல் அபராதத்தை கட்டி ரசீது வாங்கத் தயாரானேன்.

ஆனால் அதற்கும் அவர்கள் சம்மதிக்கவில்லை.

என்னிடம் லஞ்சம் வாங்குவதில் குறியாக இருந்தனர். அப்போது அந்த வழியாக சென்றவர்கள் நான் நடிகை என்பதை கண்டு பிடித்து எனக்காக போலீசாரிடம் வாதாட, அத்தோடு என்னை விட்டுவிட்டார்கள்...", என்றார்.

மீண்டும் விஜய் பேரரசு கூட்டணி

விஜய் ரொம்ப தெளிவான நடிகர். தனது அடுத்த 5 படங்களுக்கான இயக்குநர்களை முடிவு செய்துவிட்டார்.

வருடத்துக்கு மூன்றுபடம் என்ற தனது பழைய இலக்கை மீண்டும் புதுப்பித்துள்ள விஜய், அதன் படி இந்த வருடம் இன்னும் இரு படங்களை வெளியிடவுள்ளார். அடுத்து சுறா படமும், அதன் பிறகு காவல்காரனும் வெளியாக உள்ளன.

அதற்கடுத்த 3 படங்களை இயக்க இயக்குநர்கள் தயாராக உள்ளனர். அவர்களில் ஒருவர் பேரரசு.
இவர் சொன்ன ஒரு கதை ரொம்பப் பிடித்துவிட்டதால், தன் தந்தையைக் கூட கேட்காமல், பேரரசுவுக்கு வாக்கு கொடுத்துவிட்டாராம் விஜய். 'பாடிகார்ட் ரீமேக்கான காவல்காரன் முடிந்ததும் நம்ம படத்தை ஸ்டார்ட் பண்ணிடலாம்' என பேரரசிடம் கூறியுள்ளாராம்.

ஏற்கெனவே ஜெயம் ராஜா [^], சீமான், அமீர் என நிறைய பேருக்கு இதே போன்ற வாக்குறுதியைத் தந்துள்ளார் விஜய். இவர்களுக்கெல்லாம் முன்பே தங்கர் பச்சானுக்கு வாக்கு கொடுத்திருந்தார் விஜய், ஒன்பது ரூபாய் நோட்டு பட விழாவில்.

இவர்களில் யார் படம் எப்போது ஆரம்பிக்கும் என்பது மட்டும் விஜய்க்குத் தான் தெரியும்.

Madharasapattinam Trailer