ஜல்பு பிடிச்சா என்ன பண்ணுவிங்க அம்மணி..

புரசைவாக்கத்திலிருந்து சென்னை அடையாறு பார்க் ஷெரட்டன் பகுதிக்கு வீடு மாறி வந்துவிட்டார் த்ரிஷா.

இது த்ரிஷாவின் விருப்பத்துக்கேற்ப பார்த்துப் பார்த்து கட்டிய வீடாம். வீட்டுக்குள் நுழைந்துவிட்டால், வெளி உலகமே மறந்துவிடும் அளவுக்கு அனைத்து வசதிகளும் உண்டாம்.

தான் வெளிநாடுகளில் பார்த்து அனுபவித்த ரசித்த பல விஷயங்களை வீட்டுக்குள்ளேயே கொண்டுவந்துவிட்டாராம்.

இந்த வீட்டின் செக்யூரிட்டி சிஸ்டம் சக நடிக நடிகர்களை வாய் பிளக்க வைத்துள்ளது.

வீட்டைச் சுற்றிலும் ரகசியமாக கண்காணிப்பு கேமராவையும் பொருத்தி வைத்துள்ளாராம் த்ரிஷா. திருட்டு முயற்சி அல்லது தான் இல்லாத போது வரும் நபர்கள் பற்றி இதில் தெரிந்து கொள்ளலாம் என்பதால் இந்த வசதியாம்.

வாய்ஸ் லேசர் சிஸ்டம் மூலம் வீட்டுக்கு பூட்டு வசதி செய்துள்ளார். திரிஷாவும், தாய் உமாகிருஷ்ணனும் கதவருகில் நின்று குரல் கொடுத்தால் உடனே திறக்கும். வீட்டுக்குள் நுழைந்ததும் மீண்டும் சாத்திக்கொள்ளும்.

வெளியே யாரேனும் வந்து அழைத்தால் வீட்டுக்குள் இருந்து திரிஷாவோ அல்லது அவர் தாயோ குரல் கொடுத்தால்தான் கதவு திறக்குமாம். வெளிநாடுகளில் இந்த வசதி கொண்ட வீடுகளை சர்வ சாதாரணமாகப் பார்த்தாலும், சென்னைக்கு இது புதுசுதானே...

0 Response to "ஜல்பு பிடிச்சா என்ன பண்ணுவிங்க அம்மணி.."