மீண்டும் விஜய் பேரரசு கூட்டணி

விஜய் ரொம்ப தெளிவான நடிகர். தனது அடுத்த 5 படங்களுக்கான இயக்குநர்களை முடிவு செய்துவிட்டார்.

வருடத்துக்கு மூன்றுபடம் என்ற தனது பழைய இலக்கை மீண்டும் புதுப்பித்துள்ள விஜய், அதன் படி இந்த வருடம் இன்னும் இரு படங்களை வெளியிடவுள்ளார். அடுத்து சுறா படமும், அதன் பிறகு காவல்காரனும் வெளியாக உள்ளன.

அதற்கடுத்த 3 படங்களை இயக்க இயக்குநர்கள் தயாராக உள்ளனர். அவர்களில் ஒருவர் பேரரசு.
இவர் சொன்ன ஒரு கதை ரொம்பப் பிடித்துவிட்டதால், தன் தந்தையைக் கூட கேட்காமல், பேரரசுவுக்கு வாக்கு கொடுத்துவிட்டாராம் விஜய். 'பாடிகார்ட் ரீமேக்கான காவல்காரன் முடிந்ததும் நம்ம படத்தை ஸ்டார்ட் பண்ணிடலாம்' என பேரரசிடம் கூறியுள்ளாராம்.

ஏற்கெனவே ஜெயம் ராஜா [^], சீமான், அமீர் என நிறைய பேருக்கு இதே போன்ற வாக்குறுதியைத் தந்துள்ளார் விஜய். இவர்களுக்கெல்லாம் முன்பே தங்கர் பச்சானுக்கு வாக்கு கொடுத்திருந்தார் விஜய், ஒன்பது ரூபாய் நோட்டு பட விழாவில்.

இவர்களில் யார் படம் எப்போது ஆரம்பிக்கும் என்பது மட்டும் விஜய்க்குத் தான் தெரியும்.

0 Response to "மீண்டும் விஜய் பேரரசு கூட்டணி"