எதிர்காலத்தில் நிறையத் தமிழ்ப் படங்களில் நடிக்க ஆசை - ஐஸ்வர்யா

அழகிப் பட்டம் வென்ற பின்னர் சினிமாவுக்குள் நுழைந்தார் ஐஸ்வர்யா. தமிழ் மூலமாகத்தான் அவர் நடிகையானார். இருவர் படம்தான் அவரது சினிமா முகவரி. இதையடுத்து ஜீன்ஸ் படத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்தார்.
தொடர்ந்து இந்தியில் நுழைந்த அவர் இந்தியில் இன்றளவும் முன்னணியில் இருக்கிறார். இடையில் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் நடித்தார் ஐஸ்வர்யா. தற்போது மீண்டும் தமிழ் பக்கம் அவரது பார்வை திரும்பியுள்ளது.

தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துடன் எந்திரன் படத்தில் நடித்துக் கொண்டுள்ள ஐஸ்வர்யா, மணிரத்தினத்தின் இயக்கத்தில் ராவணன் படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இந்த நிலையில் தமிழில் நடிப்பது மிகவும் சவுகரியமாக இருப்பதாக கூறியுள்ள ஐஸ்வர்யா எதிர்காலத்தில் நிறையத் தமிழ்ப் படங்களில் நடிக்க ஆர்வமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

என்னுடைய இல்லத்துக்கு வர வேண்டாம் - அஜீத்

தனது பிறந்த நாளை ஆடம்பரமாகக் கொண்டாட வேண்டாம் என்று நடிகர் அஜீத் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக ஸ்பெயினிலிருந்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
என் மீது அன்பும், அபிமானமும் கொண்ட ரசிகர்களுக்கு நன்றி கலந்த வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

தற்போது பார்முலா 2 சாம்பியன் போட்டியில் பங்கேற்பதற்காக நான் ஸ்பெயின் வந்துள்ளேன். எனவே மே 1 ந் தேதி என்னுடைய பிறந்த நாளின்போது நான் சென்னையில் இருக்க வாய்ப்பில்லை.
ஆகையால் ரசிகர்கள் பிறந்த நாளின்போது என்னுடைய இல்லத்துக்கு வர வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். மேலும் ஆடம்பரமான முறையில் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

பொது மக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் ரசிகர்கள் நலத்திட்ட பணிகளில் ஈடுபட்டால் மகிழ்ச்சியடைவேன்" என்று கூறியுள்ளார்.