Showing posts with label Kisu Kisu. Show all posts
Showing posts with label Kisu Kisu. Show all posts

ப்ரீத்திக்கும் லீக்கும் காதலாம்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் பிரட் லீக்கும் பாலிவுட் நடிகை ப்ரீத்தி ஜிந்தாவுக்கும் காதல் என்று சமீப காலமாக கிசுகிசுக்கப்படுகிறது.

பஞ்சாப் கிங்ஸ் லெவன் அணியின் உரிமையாளர்களில் ஒருவர் ப்ரீத்தி ஜிந்தா. இந்த அணியின் நட்சத்திர பவுலர் பிரட் லீ. இவர் தன் மனைவியைப் பிரிந்து வாழ்கிறார்.

இந்த நிலையில், ஐபிஎல் போட்டிக்குப் பிறகு நடந்த இரவு நேர விருந்தில் ப்ரீத்தியும் பிரட் லீயும் பிரட்டும் ஜாமும் போல ஒட்டி உறவாடினார்களாம்.
இவர்களின் நெருக்கத்தைப் பார்த்து மனம் வெதும்பித்தான் யுவராஜ் சிங் அணியை விட்டே வெளியேறுவேன் என்று கூறியதாகவும் பரபரப்பாக பேசப்படுகிறது (யுவராஜ் சிங் இப்போது அதை மறுத்துள்ளார்).

இருவரும் டேட்டிங் போனதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இதனை பிரட் லீயின் மேனேஜர் மறுத்துள்ளார்.

இதுகுறித்து பஞ்சாப் அணியினர் இப்படிக் கூறுகின்றனர்:

"ப்ரீத்தி ஜிந்தாவுக்கு பஞ்சாப் அணி வீரர்கள் மீது தனி பிரியம். அதனால்தான் அவர் மிக நெருக்கமாகப் பழகி வந்தார். நட்புடன் அணைத்துக் கொண்டார்.

முன்பு யுவராஜ் சிங்கை அவர் கட்டிப் பிடித்ததை இப்படித்தான் மிகைப்படுத்தி விட்டார்கள். அணியின் நன்மைக்காகவே ப்ரீத்தி இந்த அளவு சுதந்திரமாக அனைவருடனும் பழகி வருகிறார். அதைப் போய் தவறாகப் பேசுவதா?" என்றனர்.
 

பிரகாஷ்ராஜ் மீண்டும் திருமணம்

மனைவி லலிதகுமாரியை சமீபத்தில் விவாகரத்து செய்த பிரபல நடிகர் பிரகாஷ்ராஜ், தனது நீண்ட நாள் காதலி போனி வர்மாவை திருமணம் செய்கிறார்.


தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தென்னிந்தியாவின் அனைத்து மொழிப் படங்களிலும் சிறந்த குணச்சித்திர - வில்லன் நடிகராகத் திகழ்பவர் பிரகாஷ்ராஜ். காஞ்சீபுரம் படம் மூலம் சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்றார்.

தமிழில் பல படங்களைத் தயாரித்துள்ளார். இப்போதும் தயாரித்துக் கொண்டுள்ளார்.

நடிகை டிஸ்கோ சாந்தியின் தங்கை லலிதாகுமாரியை 1994-ல் காதல் திருமணம் செய்து கொண்டார் பிரகாஷ் ராஜ். இருவருக்கும் இரு பெண் குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் பிரகாஷ்ராஜையும் பெண் டான்ஸ் மாஸ்டர் போனி வர்மாவையும் இணைத்து கிசுகிசுக்கள் வந்தன. இருவரும் நெருங்கி பழகுவதாகக் கூறப்பட்டது.

இதையடுத்து பிரகாஷ்ராஜுக்கும் லலிதாகுமாரிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. மனைவியிடம் இருந்து விவாகரத்து கோரி குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் பிரகாஷ்ராஜ்.

லலிதா குமாரியோ தன்னை கணவருடன் சேர்த்து வைக்குமாறு பதில் மனுதாக்கல் செய்தார். பின்னர் இருவரும் ஒருமனதாக பிரிய முடிவு செய்தனர். அவர்களுக்கு விவாகரத்து வழங்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து பிரகாஷ்ராஜ்-போனி வர்மாவும் ஒரே வீட்டில் தங்கி வசித்தனர்.

விரைவில் திருமணம் செய்து கொள்ளவும் முடிவு செய்துள்ளனர். திருமண ஏற்பாடுகள் ரகசியமாக நடப்பதாகக் கூறப்படுகிறது.