Showing posts with label Cini News. Show all posts
Showing posts with label Cini News. Show all posts

கிளாமருக்கு கிரீன் சிக்னல்

இதுவரை கவர்ச்சிக்கு ஓட்டுப் போடாமல் இருந்து வந்த பாவனா இப்போது கவர்ச்சிக் கட்சிக்குத் தாவ முடிவு செய்து விட்டாராம்.

அசல் படத்துக்குப் பின்னர் தன்னைத் தேடி நிறைய வாய்ப்புகள் வரும் என எதிர்பார்த்திருந்தார் பாவனா. இருப்பினும் எதிர்பார்த்த வாய்ப்புகள் வரவில்லை.இதனால் சற்றே சோர்ந்து போய்விட்டாராம்.

வாய்ப்புகள் வராமல் போனதற்கு பாவனாவும் கூட ஒரு காரணம். முன்னணி நடிகர்களோடு மட்டுமே ஜோடியாக நடிப்பேன் என்பதை ஒரு பாலிசியாகவை வைத்துள்ளதால் பீல்டில் படு ஹாட்டாக இருக்கும் பிற இளம் நாயகர்கள் பாவனாவை கண்டு கொள்ளாமல் விட்டு விட்டனர்.
இதனால் வருத்தம் அடைந்திருந்த பாவனா, இந்த பட வாய்ப்புப் பஞ்சத்தைப் போக்க கவர்ச்சி கோதாவில் குதிக்கத் தயாராகி விட்டார். இதற்காக கவர்ச்சிகரமான போஸ்களுடன் புதிய ஆல்பத்தை கோலிவுட்டில் ரவுண்டு அடிக்க விட்டுள்ளாராம்.

கிளாமர் களத்தில் குதித்து கோலிவுட்டில் தன்னை ஆணித்தரமாக நிரூபிக்க முடிவு செய்துள்ள பாவனா, சைடில், விளம்பரப் படங்களிலும் நடிக்க ஆரம்பித்துள்ளாராம்.
சினேகாவைப் போல திரைப்படங்களோடு விளம்பரங்களிலும் விறுவிறுப்பாக நடிக்கப் போகிறாராம்.

மீண்டும் ஒரு கேரள இறக்குமதி

முன்னாள் இந்திய அழகியும், உலக அழகிப் போட்டியில் இரண்டாவதாக வந்தவருமான பார்வதி ஓமணக்குட்டன் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். படத்தின் பெயர் 'உமா மகேஸ்வரம்'.

'சிவனும் சக்தியும் (மகேஸ்வரனும் - உமாவலும்) சேரும்போதுதான் உலகில் உயிர்கள் பிறக்கின்றன. அதே நி்லையில்தான் கலையும் பிறக்கிறது. ஏனெனில் உயிர்தான் கலை' என்ற கதைக் கருவுடன் உருவாகிறதாம் இந்த உமா மகேஸ்வரம்.

ஹீரோவாக டான்ஸர் மணி அறிமுகமாகிறார். நிதின் ராமகிருஷ்ணன் இயக்கும் இந்தப் படத்தின் துவக்க விழா இன்று சென்னையில் நடந்தது.

பிரபல இயக்குநர் கே விஸ்வநாத் நேரில் வந்து வாழ்த்தினார்.

ட்ரூசோல் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் பிரகாஷ்ராஜ் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார்.
ஒளிப்பதிவு மது அம்பாட், இசை சந்தோஷ் நாயர், பிஆர்ஓ வெங்கட்.

கர்நாடக மாநிலத்தின் ஹம்பி போன்ற கலைச் சிறப்பு மிக்க இடங்களில் இந்தப் படத்தின் ஷூட்டிங் நடக்கிறது.

மீண்டும் பாலா - சூர்யா

விஷால்- ஆர்யாவை வைத்து பாலா இயக்கும் அவன் இவன் படத்தில் கவுரவ வேடத்தில் நடிக்கிறார் சூர்யா.
 
கல்பாத்தி அகோரம் தயாரிக்கும் அவன் இவன் படத்தின் ஷூட்டிங் படு வேகமாக நடந்து வருகிறது.

அடுத்த சில மாதங்களுக்குள் படப்பிடிப்பை முடித்து வெளியீட்டுக்குத் தயார்படுத்திக் கொள்வதாக பாலா தரப்பில் உறுதியளிக்கப்பட்டுள்ளதால், தயாரிப்பாளர் மிகவும் உற்சாகமாக உள்ளார்.

இந்த நிலையில் அவரை உற்சாகப்படுத்தும் இன்னொரு விஷயத்தை வெளிப்படுத்தியுள்ளார் பாலா.

இந்தப் படத்தில் நடிகர்  சூர்யா கவுரவ வேடத்தில் நடிக்கிறார் என்பதே அது.

உண்மையில் அவன் இவன் படத்தில் சூர்யாவையும் அவரது தம்பி கார்த்தியையும் நடிக்க வைக்கத்தான் பாலா திட்டமிட்டிருந்தார். இதுகுறித்து அவர்கள் இருவரையும் அழைத்துப் பேசிய போது, கால்ஷீட் பிரச்சினையைக் காட்டி, நடிக்க முடியாத சூழலை விளக்கினார்களாம்.

இப்போது, படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்குமாறு சூர்யாவிடம் சொன்னாராம் பாலா. சில தினங்கள் மட்டுமே கால்ஷீட் தேவைப்பட்டதால், உடனே ஒப்புக் கொண்டாராம் சூர்யா.

நானும் அரசியல் வாதிதான் பாஸ்

கார் ரேஸில் பிஸியாக உள்ள அஜீத், சமீபத்தில் சென்னை வந்திருந்தார். அப்போது வார இதழ் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் அவர் இப்படிக் கூறியுள்ளார்.


படங்கள் ஓடாததால்தான் ரேஸுக்குப் போய்விட்டீர்களா என்ற கேள்விக்கு அஜீத் பதிலளிக்கையில், "நான் இதுவரை நடிச்ச அத்தனை படங்களிலும் என்னோட 100 சதவிகித உழைப்பைக் கொடுத்துத்தான் நடிச்சிருக்கேன். ஆனா, அதில் பல படங்கள் ஹிட் ஆகலைன்னு நினைக்கும்போது மனசுக்கு ரொம்பக் கஷ்டமா இருக்கு. தொடர்ந்து மட்டமான, குப்பையான படங்களா நடிச்சு என் ரசிகர்களை நான் ஏமாத்த விரும்பலை.

அதுவும் இப்போ தியேட்டருக்கு வந்து சினிமா பார்க்கிறது பெரிய செலவு பிடிக்கிற விஷயம். அவ்வளவு காசு செலவழிச்சு தியேட்டருக்கு வர்ற ரசிகர்கள் யாரும் நிச்சயம் குப்பையான படங்கள் பார்க்க விரும்பமாட்டாங்க.

என்னைப் பொறுத்தவரை, மட்டமான படங்களில் நடிக் கிறதுக்குப் பதிலா, சும்மா வீட்ல உட்காரலாம். என்னால் தொடர்ந்து வருஷத்துக்கு 200 நாள் கால்ஷீட் கொடுத்து கோடிக் கோடியாச் சம்பாதிக்க முடியும். ஆனால், எனக்கு அதில் ஆர்வம் இல்லை. இந்த அஜீத் மனசுக்குப் பிடிச்சதை மட்டும்தான் செய்வான். மனுஷனுக்குச் சந்தோஷம்தான் சார் முக்கியம்!" என்றார்.

அஜீத் குமார் அரசியல்வாதி ஆவாரா என்ற கேள்விக்கு, "இப்போ நான் அரசியல்வாதி இல்லைன்னு யார் சொன்னது? இப்பவும் எப்பவும் அரசியல் என்னைச் சுத்தி இருந்துட்டேதான் இருக்கு. சினிமா இண்டஸ்ட்ரி முழுக்கவே பாலிடிக்ஸ்தான்.

கருணையே இல்லாத அந்த இண்டஸ்ட்ரியில் ஒருத்தன் சர்வைவ் பண்ணணும்னா, அவனுக்கு நிச்சயம் அரசியல் தெரிஞ்சிருக்கணும். சினிமாவில் எந்த காட்ஃபாதரும் இல்லாம 18 வருஷம் சமாளிச்சு நிக்க, சாதிக்க, நானும் எப்பவோ அரசியல்ல இறங்கிட்டேன் பாஸ்.

ஸ்கூல், காலேஜ், ஆபீஸ்னு எல்லா இடங்களிலும் அரசியல் இருக்கு. அரசியல் இல்லாத ஒரு இடம்கூட இந்த உலகத்தில் இல்லை. அரசியல் இல்லாத மனுஷன் யாரும் இந்த உலகத்தில் கிடையாது. அஜீத் மட்டும் அரசியலில் இல்லாமல் இருக்க முடியுமா என்ன?'' என்று கூறியுள்ளார் அஜீத்.

வேலாயுதம்

விஜய் நடிக்கும் புதிய படத்துக்கு வேலாயுதம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்தப் படத்தை ஜெயம் ராஜா இயக்குகிறார்.
சுறா படத்தையடுத்து, மலையாளப் படமான பாடிகார்டு ரீமேக்கில் நடித்து வருகிறார் விஜய். இந்தப் படத்தின் பெயர் காவல்காரன் என்று முதலில் விஜய் தரப்பில் கூறப்பட்டது. பின்னர், காவல்காரன் தலைப்பை சூட்டுவது குறித்து யோசித்து வருகிறோம் என்று கூறியுள்ளனர்.

ஆனால் ஜெயம் ராஜா இயக்கும் விஜய்யின் 52வது படத்துக்கு அந்த மாதிரி குழப்பம் எதுவும் இல்லை. தலைப்பை வைத்த பிறகுதான் படப்பிடிப்புக்குச் செல்வது ஜெயம் ராஜாவின் வழக்கம்.

எனவே விஜய்யின் இந்தப் படத்துக்கு வேலாயுதம் என்ற பெயரைச் சூட்டியுள்ளனர். விஜய் முன்பு வைக்கப்பட்ட நான்கைந்து தலைப்புகளில், அவரே விரும்பித் தேர்வு செய்த தலைப்பாம் இது. இசையமைப்பாளராக தேவிஸ்ரீபிரசாத் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இந்தப் படத்தின் நடிகர்கள், இதர தொழில் நுட்பக் கலைஞர்கள் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாக உள்ளது.

ஜூலை மாதம் வேலாயுதம் படப்பிடிப்பு துவங்குகிறது.

எதிர்காலத்தில் நிறையத் தமிழ்ப் படங்களில் நடிக்க ஆசை - ஐஸ்வர்யா

அழகிப் பட்டம் வென்ற பின்னர் சினிமாவுக்குள் நுழைந்தார் ஐஸ்வர்யா. தமிழ் மூலமாகத்தான் அவர் நடிகையானார். இருவர் படம்தான் அவரது சினிமா முகவரி. இதையடுத்து ஜீன்ஸ் படத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்தார்.
தொடர்ந்து இந்தியில் நுழைந்த அவர் இந்தியில் இன்றளவும் முன்னணியில் இருக்கிறார். இடையில் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் நடித்தார் ஐஸ்வர்யா. தற்போது மீண்டும் தமிழ் பக்கம் அவரது பார்வை திரும்பியுள்ளது.

தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துடன் எந்திரன் படத்தில் நடித்துக் கொண்டுள்ள ஐஸ்வர்யா, மணிரத்தினத்தின் இயக்கத்தில் ராவணன் படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இந்த நிலையில் தமிழில் நடிப்பது மிகவும் சவுகரியமாக இருப்பதாக கூறியுள்ள ஐஸ்வர்யா எதிர்காலத்தில் நிறையத் தமிழ்ப் படங்களில் நடிக்க ஆர்வமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

என்னுடைய இல்லத்துக்கு வர வேண்டாம் - அஜீத்

தனது பிறந்த நாளை ஆடம்பரமாகக் கொண்டாட வேண்டாம் என்று நடிகர் அஜீத் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக ஸ்பெயினிலிருந்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
என் மீது அன்பும், அபிமானமும் கொண்ட ரசிகர்களுக்கு நன்றி கலந்த வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

தற்போது பார்முலா 2 சாம்பியன் போட்டியில் பங்கேற்பதற்காக நான் ஸ்பெயின் வந்துள்ளேன். எனவே மே 1 ந் தேதி என்னுடைய பிறந்த நாளின்போது நான் சென்னையில் இருக்க வாய்ப்பில்லை.
ஆகையால் ரசிகர்கள் பிறந்த நாளின்போது என்னுடைய இல்லத்துக்கு வர வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். மேலும் ஆடம்பரமான முறையில் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

பொது மக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் ரசிகர்கள் நலத்திட்ட பணிகளில் ஈடுபட்டால் மகிழ்ச்சியடைவேன்" என்று கூறியுள்ளார்.

விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கிறார்

கிருஸ்துவராக இருந்தாலும் விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் வாராவாரம் வடபழனி முருகன் கோயிலுக்கு செல்வதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.


ஆனால் அவர் மகன் விஜய் இதற்கெல்லாம் நேர்மாறாக இருக்கிறார்.  அதனால்தான் ரசிகர்கள் கொந்தளித்து போயிருக்கிறார்கள்.

’’தான் நடிக்கும் படங்களில் மட்டும் விபூதி, குங்குமத்தை அள்ளிப்பூசி நடிக்கிறார்.  விநாயகர், முருகன் என்று இந்து கடவுள்களையெல்லாம் வணங்குகிறார்.  நிஜத்தில் மட்டும் ஏன் இவற்றை வெறுக்கிறார்.

சினிமாவில் ஒன்று, நிஜத்தில் ஒன்று என்று இனி அவர் இரட்டை வேசம் போடக்கூடாது.    இனிமேல் அவர் சினிமாவில் விபூதி பூசி நடிக்கக்கூடாது.   இந்து கடவுள்களை வணங்குவது போல் நடிக்கக்கூடாது’’ என்று ரசிகர்கள் ஆத்திரப்படுகிறார்கள்.

விஜய் புதிதாக நடிக்கும் காவல்காரன் படப்பிடிப்பு காரைக்குடியில் நடந்து வருகிறது. படப்பிடிப்பின் முதல் நாள் பூஜை திருவிடை மருதூரில் அமைந்துள்ள கோவில் ஒன்றில் நடந்தது.


ஹீரோ விஜய், டைரக்டர் சித்திக் மற்றும் படக்குழுவினர், விஜய் ரசிகர்கள் என கோயிலுக்கு உள்ளேயேயும் வெளியேயும் எங்கு பார்த்தாலும் கூட்டம்.


 பூஜை முடிந்து அய்யர் விபூதியை எல்லாருக்கும் வழங்கினார். ஆனால் விஜய் அந்த விபூதியை வாங்க மறுத்துவிட்டாராம்.


இந்த சம்பவத்தால் ஆவேசமடைந்த இந்து மக்கள் கட்சி பிரமுகர் கண்ணன், 

’’விஜய் அடிப்படையில் கிறிஸ்துவராக இருந்தாலும், இந்துக்களும் படம் பார்ப்பதால்தான் அவரது தொழிலில் உயர்ந்த இடத்தை பிடிக்க முடிந்திருக்கிறது. இதை நினைத்தாவது அந்த விபூதியை வாங்கி அவர் பூசியிருக்கலாம்.

அப்படி இந்து மதத்தின் மேல் நம்பிக்கையில்லாதவர் எதற்காக அந்த கோவிலுக்கு போகணும். வர இயலாது என்று மறுத்திருக்கலாமே? இனிமேலும் இதுபோன்ற புறக்கணிப்புகள் நடந்தால் எங்கள் கட்சி பார்த்துக் கொண்டு சும்மாயிருக்காது’’என்று கண்டனம் தெரிவித்திருந்தார்.

ஜல்பு பிடிச்சா என்ன பண்ணுவிங்க அம்மணி..

புரசைவாக்கத்திலிருந்து சென்னை அடையாறு பார்க் ஷெரட்டன் பகுதிக்கு வீடு மாறி வந்துவிட்டார் த்ரிஷா.

இது த்ரிஷாவின் விருப்பத்துக்கேற்ப பார்த்துப் பார்த்து கட்டிய வீடாம். வீட்டுக்குள் நுழைந்துவிட்டால், வெளி உலகமே மறந்துவிடும் அளவுக்கு அனைத்து வசதிகளும் உண்டாம்.

தான் வெளிநாடுகளில் பார்த்து அனுபவித்த ரசித்த பல விஷயங்களை வீட்டுக்குள்ளேயே கொண்டுவந்துவிட்டாராம்.

இந்த வீட்டின் செக்யூரிட்டி சிஸ்டம் சக நடிக நடிகர்களை வாய் பிளக்க வைத்துள்ளது.

வீட்டைச் சுற்றிலும் ரகசியமாக கண்காணிப்பு கேமராவையும் பொருத்தி வைத்துள்ளாராம் த்ரிஷா. திருட்டு முயற்சி அல்லது தான் இல்லாத போது வரும் நபர்கள் பற்றி இதில் தெரிந்து கொள்ளலாம் என்பதால் இந்த வசதியாம்.

வாய்ஸ் லேசர் சிஸ்டம் மூலம் வீட்டுக்கு பூட்டு வசதி செய்துள்ளார். திரிஷாவும், தாய் உமாகிருஷ்ணனும் கதவருகில் நின்று குரல் கொடுத்தால் உடனே திறக்கும். வீட்டுக்குள் நுழைந்ததும் மீண்டும் சாத்திக்கொள்ளும்.

வெளியே யாரேனும் வந்து அழைத்தால் வீட்டுக்குள் இருந்து திரிஷாவோ அல்லது அவர் தாயோ குரல் கொடுத்தால்தான் கதவு திறக்குமாம். வெளிநாடுகளில் இந்த வசதி கொண்ட வீடுகளை சர்வ சாதாரணமாகப் பார்த்தாலும், சென்னைக்கு இது புதுசுதானே...

வாயசைத்தால் அபராதமா? சமிரா

காரில் ஒலித்த பாட்டுக்கு ஏற்ப வாயசைத்தபடி கார் ஓட்டியதை, செல்போனில் பேசியதாக நினைத்து எனக்கு அபராதம் போட்டார்கள் போலீசார் என்றார் சமீரா ரெட்டி.

வாரணம் ஆயிரம், அசல் படங்களின் நாயகி சமீரா ரெட்டி. போகுமிடமெல்லாம் போலீசுடன் மோதும் ராசி இவருக்கு.


ஏற்கனவே மலேசியா போலீசாருடன் மோதியதில் லிப்டில் இருந்து வெளியில் தள்ளப்பட்டார் சமீரா. இப்போது மும்பை போலீசாருடனும் மோதியுள்ளார்.

போக்குவரத்து போலீசார் தன்னிடம் லஞ்சம் கேட்டதாக புகார் கூறியுள்ளார். இதுபற்றி நிருபர்களிடம் சமீரா கூறுகையில், "மும்பையில் இருந்து சாந்தா குரூஸ் விமான நிலையத்துக்கு காரில் சென்று கொண்டிருந்தேன். விமான நிலையம் அருகில் எனது காரை போக்குவரத்து போலீசார் வழிமறித்து நிறுத்தினர். நான் செல்போனில் பேசிக்கொண்டே கார் ஓட்டியதாக குற்றம் சுமத்தினர்.

ஆனால் உண்மையில் நான் செல்போனில் பேசவில்லை. செல்போனில் இருந்து வந்த பாட்டுக்கு ஏற்ப என் உதடுகளை அசைத்தேன். நான் பேசிக்கொண்டு வந்ததாக தப்பாக நினைத்து என்னைப் பிடித்து விட்டனர். அவர்களிடம் செல்போனில் பேசவில்லை என்று எவ்வளவு கெஞ்சியும் கேட்கவில்லை. வேறு வழியில்லாமல் அபராதத்தை கட்டி ரசீது வாங்கத் தயாரானேன்.

ஆனால் அதற்கும் அவர்கள் சம்மதிக்கவில்லை.

என்னிடம் லஞ்சம் வாங்குவதில் குறியாக இருந்தனர். அப்போது அந்த வழியாக சென்றவர்கள் நான் நடிகை என்பதை கண்டு பிடித்து எனக்காக போலீசாரிடம் வாதாட, அத்தோடு என்னை விட்டுவிட்டார்கள்...", என்றார்.

மீண்டும் விஜய் பேரரசு கூட்டணி

விஜய் ரொம்ப தெளிவான நடிகர். தனது அடுத்த 5 படங்களுக்கான இயக்குநர்களை முடிவு செய்துவிட்டார்.

வருடத்துக்கு மூன்றுபடம் என்ற தனது பழைய இலக்கை மீண்டும் புதுப்பித்துள்ள விஜய், அதன் படி இந்த வருடம் இன்னும் இரு படங்களை வெளியிடவுள்ளார். அடுத்து சுறா படமும், அதன் பிறகு காவல்காரனும் வெளியாக உள்ளன.

அதற்கடுத்த 3 படங்களை இயக்க இயக்குநர்கள் தயாராக உள்ளனர். அவர்களில் ஒருவர் பேரரசு.
இவர் சொன்ன ஒரு கதை ரொம்பப் பிடித்துவிட்டதால், தன் தந்தையைக் கூட கேட்காமல், பேரரசுவுக்கு வாக்கு கொடுத்துவிட்டாராம் விஜய். 'பாடிகார்ட் ரீமேக்கான காவல்காரன் முடிந்ததும் நம்ம படத்தை ஸ்டார்ட் பண்ணிடலாம்' என பேரரசிடம் கூறியுள்ளாராம்.

ஏற்கெனவே ஜெயம் ராஜா [^], சீமான், அமீர் என நிறைய பேருக்கு இதே போன்ற வாக்குறுதியைத் தந்துள்ளார் விஜய். இவர்களுக்கெல்லாம் முன்பே தங்கர் பச்சானுக்கு வாக்கு கொடுத்திருந்தார் விஜய், ஒன்பது ரூபாய் நோட்டு பட விழாவில்.

இவர்களில் யார் படம் எப்போது ஆரம்பிக்கும் என்பது மட்டும் விஜய்க்குத் தான் தெரியும்.

உணர்ச்சி மிகுதில் பிரியங்காவை கட்டிப்பிடித்த ரசிகர்

ஆர்வம் மிகுதியால் தன்னைக் கட்டிப்பிடித்த ரசிகர் ஒருவருக்கு பளார் விட்டார் நடிகை ப்ரியங்கா சோப்ரா.


பொதுவாகவே படங்களில் பிஸியாக இருக்கும் ப்ரியங்கா சோப்ரா பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதில்லை. தவிர்க்க முடியாமல் பங்கேற்கும் நிலை வந்தாலும் ஏகப்பட்ட செக்யூரிட்டிகளோடு தான் வருகிரார்.

சமீபத்தில் ஒரு விருந்துக்கு அவரை அழைத்திருந்தார் ப்ரியங்காவுக்கு வேண்டப்பட்டவர். கட்டாயம் பங்கேற்றே தீர வேண்டும் என்பதால், படப்பிடிப்பு தளத்திலிருந்து கேரவனில் உடை மாற்றிக் கொண்டு விருந்துக்கு சென்றார் ப்ரியங்கா.

விருந்து நடந்த வீட்டின் முன்னால் வந்து இறங்கியபோது அங்கு ஏராளமான இளைஞர்கள் கூடி நின்றனர். அதில் ஒருவர் பிரியங்கா சோப்ராவை பார்த்ததும் உணர்ச்சிவசப்பட்டு படாரென்று ப்ரியங்காவைக் கட்டிப் பிடித்தார். கூடி நின்ற மற்ற இளைஞர்களும் அவரை சூழ்ந்து, ப்ரியங்காவைத் தொட முயன்றனர்.

இத்ல் ஆத்திரமடைந்த பிரியங்கா சோப்ரா, அந்த ரசிகரின் பிடியில் இருந்து திமிறி விடுபட்டார். அப்போதும் அந்த இடத்தைவிட்டு நகராத ரசிகர் கன்னத்தில் ஓங்கி ஒரு பளார் விட்டார்.

உடனே ப்ரியங்காவுடன் வந்திருந்த பாதுகாவர்கள் அந்த ரசிகரை அடித்துத் துவைத்தனர். அவரை போலீ சில் ஒப்படைக்க முயன்றனர். ஆனால் பிரியங்கா வேண்டாம் விட்டு விடுங்கள் என்று கூறி விட்டார்.

இந்த சம்பவத்தால் மூட் அவுட் ஆன ப்ரியங்கா, விருந்துக்குச் செல்லாமல் வண்டியை வீட்டுக்கு விடச் சொன்னதில், விருந்துக்கு அழைத்த நண்பர் மனம் உடைந்தது தனிக்கதை!

சிலுக்குவின் வாழ்க்கை படமாகிறது


ழுபதுகளின் இறுதியில் வண்டிச்சக்கரம் படம் மூலமாக தமிழ்சினிமாவுக்கு வந்தார் சிலுக்கு. (சில்க் ஸ்மிதா) விஜயவாடா விஜயலஷ்மி என்ற பெயரை சினிமாவுக்காக சில்க்ஸ்மிதா என்று மாற்றி வைத்தவர் நடிகரும் கதாசிரியருமான வினுசக்கரவர்த்தி.
 

இவர்தான் சிலுக்கை சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியவர். 18 வயதிலேயே திருமணம் ஆன பிறகும் கூட வறுமையிலிருந்து மீள முடியாமல், தூரத்து உறவு அத்தையுடன் சினிமா ஆசையில் சென்னைக்கு வந்த சிலுக்கு பதினேழு ஆண்டுகள் தன் கவர்ச்சியால் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் திரையுலகை கட்டி ஆண்டார். 


அப்போதெல்லாம் திரைப்படங்களை வாங்க விநியோகஸ்தர்கள் ஒரு நிபந்தனை போடுவார்களாம் தயாரிப்பாளர்களுக்கு. அதாவது கண்டிப்பாக சிலுக்குவின் நடனம் அந்தப் படத்தில் இடம்பெற வேண்டுமென்று.

ஒருமுறை படப்பிடிப்பின் போது ஒரு ஆப்பிள் பழத்தை ஒரு கடி கடித்துவிட்டு தூக்கிப் போட்டாராம் சிலுக்கு. அந்தப் பழம் ஏலம் போனது என்பது எந்த நடிகைக்கும் கிடைக்காத பெருமை. இன்னமும் பல திரை கதாநாயகிகள் சிலுக்குவின் கண்களுக்கு யார் கண்களுமே ஈடு இணை கிடையாது என்று பேட்டி தருகிறார்கள்.

சிலுக்கு இல்லாத காரணத்தால் ரஜினி படத்தையே ஒரு முறை விநியோகிஸ்தர்கள் வாங்க மறுத்தார்கள். பின் சிலுக்குடன் ரஜினி ஆடும் ஒரு பாடலை இணைத்து வெளியிட்டுயிருக்கிறார்கள். சிலுக்கு தான் ஆசைப்பட்டு நடிக்க விரும்பியது பாக்கியராஜ் உடன். நடித்த படம், ரகசிய போலீஸ்.

சிலுக்கு கடைசி வரை யாரையுமே திருமணம் செய்து கொள்ளவில்லை. யாரையும் கிட்ட நெருங்க விடாமல் இருந்த சிலுக்கு தன் தூரத்து உறவினரான டாக்டர் ஒருவருடன் வாழ்ந்திருக்கிறார்.

சிலுக்கு தன் வாழ்நாளில் பலருக்கு உதவியாய் இருந்துள்ளார். சில நக்சலைட் ஆதரவாளர்களுக்கு ஆதரவாக இருந்துள்ளார்.
நக்சலைட் ஆட்கள் அக்கா என்று அழைக்கும் அளவிற்கு பழக்கம் இருந்திருக்கிறது. 


நடிக்கை வரவில்லையென்றால் நக்சலைட்
ஆகியிருப்பேன் என்றும் பேட்டி கொடுத்திருக்கிறார். நக்சலைட்டுடன் அவர் ஏன் தொடர்பு வைத்திருந்தார்.   அவருக்கு ஏன் நக்சலைட் மீது இத்தனை ஆர்வம்? என்ற கேள்விகளுக்கு இது வரை விடையில்லை.

திரையுலகில் நட்சத்திரமாக ஜொலித்த, ஆயிரக்கணக்கான ரசிகர்களை மகிழ்வித்த சிலுக்குவின் தனிப்பட்ட வாழ்க்கை மிக சோகமானது. 1996ஆம் ஆண்டு வடபழனியில் இருந்த தனது இல்லத்தில் தற்கொலை செய்துகொண்டு மாண்டுபோனார். திரையுலகமும், ரசிகர்களும் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.

சிலுக்குவின் திடீர் மரணத்தால் அவர் நடித்து வந்த பல திரைப்படங்கள் பாதித்தது.
சிலுக்கினால் பயனடைந்தவர்கள் பலர் என்றாலும் கடைசிவரை அவருக்கு நண்பர்களாய் இருந்தவர்கள் மனோரம்மா, லட்சுமி, வடிவுக்கரசி, வினு சக்கரவர்த்தி, முத்துராமன், கங்கை அமரன் போன்ற ஒரு சிலர் தான். அவரது இறுதி ஊர்வலத்திற்கு வந்தவர்களும் இவர்கள் மற்றும் ஒரு சிலர் தான்.

இப்படிப்பட்ட பேரலையும்,பெரும் சோகமும் நிறைந்த சிலுக்கின்  வாழ்க்கை  சினிமாவாகிறது.
இந்தி, தமிழில் ஏக்தாகபூர் இப்படத்தை தயாரிக்கிறார். மிலன்ருத்யா இயக்குகிறார். சிலுக்கு கேரக்டரில் நடிக்க வித்யாபாலனிடம் பேசி உள்ளனர். படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.