Showing posts with label Bala. Show all posts
Showing posts with label Bala. Show all posts

மீண்டும் பாலா - சூர்யா

விஷால்- ஆர்யாவை வைத்து பாலா இயக்கும் அவன் இவன் படத்தில் கவுரவ வேடத்தில் நடிக்கிறார் சூர்யா.
 
கல்பாத்தி அகோரம் தயாரிக்கும் அவன் இவன் படத்தின் ஷூட்டிங் படு வேகமாக நடந்து வருகிறது.

அடுத்த சில மாதங்களுக்குள் படப்பிடிப்பை முடித்து வெளியீட்டுக்குத் தயார்படுத்திக் கொள்வதாக பாலா தரப்பில் உறுதியளிக்கப்பட்டுள்ளதால், தயாரிப்பாளர் மிகவும் உற்சாகமாக உள்ளார்.

இந்த நிலையில் அவரை உற்சாகப்படுத்தும் இன்னொரு விஷயத்தை வெளிப்படுத்தியுள்ளார் பாலா.

இந்தப் படத்தில் நடிகர்  சூர்யா கவுரவ வேடத்தில் நடிக்கிறார் என்பதே அது.

உண்மையில் அவன் இவன் படத்தில் சூர்யாவையும் அவரது தம்பி கார்த்தியையும் நடிக்க வைக்கத்தான் பாலா திட்டமிட்டிருந்தார். இதுகுறித்து அவர்கள் இருவரையும் அழைத்துப் பேசிய போது, கால்ஷீட் பிரச்சினையைக் காட்டி, நடிக்க முடியாத சூழலை விளக்கினார்களாம்.

இப்போது, படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்குமாறு சூர்யாவிடம் சொன்னாராம் பாலா. சில தினங்கள் மட்டுமே கால்ஷீட் தேவைப்பட்டதால், உடனே ஒப்புக் கொண்டாராம் சூர்யா.

பாலாவுக்கு பாலசந்தர் புகழாரம்

தயாரிப்பாளர் சிவா தான் தயாரிக்கும் புதிய படத்தின் தொடக்க விழாவில் இயக்குனர் பாலாவை கவுரவப் படுத்தினார். விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட டைரக்டர் பாலசந்தர், பாலாவுக்கு நினைவுப்பரிசு வழங்கி, வாழ்த்தி பேசினார்.அவர் மேலும் ஒரு படம் எடுக்குறதுக்கு மூணு வருஷம் என்பதெல்லாம் ரொம்ப ஓவர். அதை கொஞ்சம் குறைத்துக்கொள்ளுங்கள்... என்று டைரக்டர் பாலாவிடம், பாலசந்தர் கேட்டுக் கொண்டார். நான் கடவுள் படத்துக்காக சிறந்த இயக்குனருக்கான தேசிய விருது பெற்றிருக்கும் டைரக்டர் பாலாவை கோலிவுட் பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

அவர் பேசுகையில், "நடுத்தர சினிமாவை மேலே எடுத்துச்சென்றவர் பாலா, இவரின் படங்களைப் பார்த்து நான் வியந்திருக்கிறேன். என்ன இவர் படங்கள் வெளியாவதற்குத்தான் மூன்று வருஷமாகிறது. இதை நீங்க கொஞ்சம் கட்டுப்படுத்துங்க சார். நான் உங்களின் ரசிகர்களின் தலைவனாக கேட்டுக் கொள்கிறேன். உங்கள் படங்களை பார்க்க நான் மிகவும் ஆவலாக இருக்கிறேன். என்னைப் போலதான் மக்களும். எனவே இரண்டு, மூன்று வருஷம் ரொம்ப ஓவர். ஒரு வருடத்திற்குள் படத்தை முடித்து விடுங்கள். இதை நீங்கள் எனது அட்வைஸாக எடுத்துக்கொள்ள வேண்டும். நான் என்ன செய்ய.... வயதாகி விட்டது அதனால் இப்படி அட்வைஸ் செய்யத்தான் வேண்டும். உங்கள் படங்களைப் பார்த்து நான் சிலவற்றை கற்றுக் கொள்கிறேன். எதையெல்லாம் நான் செய்யவில்லை என்று உங்கள் படத்தை பார்த்துதான் நான் அறிந்துக்கொள்கிறேன்." என்றார்.