Showing posts with label Vijay. Show all posts
Showing posts with label Vijay. Show all posts

வேலாயுதம்

விஜய் நடிக்கும் புதிய படத்துக்கு வேலாயுதம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்தப் படத்தை ஜெயம் ராஜா இயக்குகிறார்.
சுறா படத்தையடுத்து, மலையாளப் படமான பாடிகார்டு ரீமேக்கில் நடித்து வருகிறார் விஜய். இந்தப் படத்தின் பெயர் காவல்காரன் என்று முதலில் விஜய் தரப்பில் கூறப்பட்டது. பின்னர், காவல்காரன் தலைப்பை சூட்டுவது குறித்து யோசித்து வருகிறோம் என்று கூறியுள்ளனர்.

ஆனால் ஜெயம் ராஜா இயக்கும் விஜய்யின் 52வது படத்துக்கு அந்த மாதிரி குழப்பம் எதுவும் இல்லை. தலைப்பை வைத்த பிறகுதான் படப்பிடிப்புக்குச் செல்வது ஜெயம் ராஜாவின் வழக்கம்.

எனவே விஜய்யின் இந்தப் படத்துக்கு வேலாயுதம் என்ற பெயரைச் சூட்டியுள்ளனர். விஜய் முன்பு வைக்கப்பட்ட நான்கைந்து தலைப்புகளில், அவரே விரும்பித் தேர்வு செய்த தலைப்பாம் இது. இசையமைப்பாளராக தேவிஸ்ரீபிரசாத் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இந்தப் படத்தின் நடிகர்கள், இதர தொழில் நுட்பக் கலைஞர்கள் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாக உள்ளது.

ஜூலை மாதம் வேலாயுதம் படப்பிடிப்பு துவங்குகிறது.

விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கிறார்

கிருஸ்துவராக இருந்தாலும் விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் வாராவாரம் வடபழனி முருகன் கோயிலுக்கு செல்வதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.


ஆனால் அவர் மகன் விஜய் இதற்கெல்லாம் நேர்மாறாக இருக்கிறார்.  அதனால்தான் ரசிகர்கள் கொந்தளித்து போயிருக்கிறார்கள்.

’’தான் நடிக்கும் படங்களில் மட்டும் விபூதி, குங்குமத்தை அள்ளிப்பூசி நடிக்கிறார்.  விநாயகர், முருகன் என்று இந்து கடவுள்களையெல்லாம் வணங்குகிறார்.  நிஜத்தில் மட்டும் ஏன் இவற்றை வெறுக்கிறார்.

சினிமாவில் ஒன்று, நிஜத்தில் ஒன்று என்று இனி அவர் இரட்டை வேசம் போடக்கூடாது.    இனிமேல் அவர் சினிமாவில் விபூதி பூசி நடிக்கக்கூடாது.   இந்து கடவுள்களை வணங்குவது போல் நடிக்கக்கூடாது’’ என்று ரசிகர்கள் ஆத்திரப்படுகிறார்கள்.

விஜய் புதிதாக நடிக்கும் காவல்காரன் படப்பிடிப்பு காரைக்குடியில் நடந்து வருகிறது. படப்பிடிப்பின் முதல் நாள் பூஜை திருவிடை மருதூரில் அமைந்துள்ள கோவில் ஒன்றில் நடந்தது.


ஹீரோ விஜய், டைரக்டர் சித்திக் மற்றும் படக்குழுவினர், விஜய் ரசிகர்கள் என கோயிலுக்கு உள்ளேயேயும் வெளியேயும் எங்கு பார்த்தாலும் கூட்டம்.


 பூஜை முடிந்து அய்யர் விபூதியை எல்லாருக்கும் வழங்கினார். ஆனால் விஜய் அந்த விபூதியை வாங்க மறுத்துவிட்டாராம்.


இந்த சம்பவத்தால் ஆவேசமடைந்த இந்து மக்கள் கட்சி பிரமுகர் கண்ணன், 

’’விஜய் அடிப்படையில் கிறிஸ்துவராக இருந்தாலும், இந்துக்களும் படம் பார்ப்பதால்தான் அவரது தொழிலில் உயர்ந்த இடத்தை பிடிக்க முடிந்திருக்கிறது. இதை நினைத்தாவது அந்த விபூதியை வாங்கி அவர் பூசியிருக்கலாம்.

அப்படி இந்து மதத்தின் மேல் நம்பிக்கையில்லாதவர் எதற்காக அந்த கோவிலுக்கு போகணும். வர இயலாது என்று மறுத்திருக்கலாமே? இனிமேலும் இதுபோன்ற புறக்கணிப்புகள் நடந்தால் எங்கள் கட்சி பார்த்துக் கொண்டு சும்மாயிருக்காது’’என்று கண்டனம் தெரிவித்திருந்தார்.